யாழ். நெடுந்தீவு படுகொலை: பிரதான சூத்திரதாரி நகையுடன் கைது

Date:

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 5 பேர் வெட்டிக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை பொலிசார் நேற்றிரவு கைது செய்தனர்.

அத்தோடு கொள்ளையிடப்பட்ட 40 பவுண் தங்கநகைகளும் அவரிடமிருந்து மீட்கப்பட்டன.

இந்த கொலைகளின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவரே நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

கொல்லப்பட்ட வீட்டிலிருந்து திருடப்பட்ட 40 பவுண் தங்க நகைகளும் அவரிடமிருந்து மீட்கப்பட்டன.

இந்த கொலைகளின் மற்றொரு பிரதான சூத்திரதாரி ஜேர்மனியில் இருக்கலாமென நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக நேற்று (22) மீட்கப்பட்டனர்.

கொலை செய்யப்பட்டு ஐந்து பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. குறித்து ஐந்து பேரும் 70 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் ஆவார்.

பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்ற 78 வயதான வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம்இ யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களான 82 வயதான நாகநதி பாலசிங்கம் இ 76 வயதான பாலசிங்கம் கண்மணிப்பிள்ளைஇ 83 வயதான கார்த்திகேசு நாகேஸ்வரிஇ 75 வயதான மகாதேவன் என்பவர்களே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 100 வயதான கனகம் பூரணம் என்ற மூதாட்டி யாழ். போதனா வைத்தியசாலையில் சிசிக்சை பெற்று வருகிறார்.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...