யாழ். நெடுந்தீவு படுகொலை: பிரதான சூத்திரதாரி நகையுடன் கைது

Date:

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 5 பேர் வெட்டிக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை பொலிசார் நேற்றிரவு கைது செய்தனர்.

அத்தோடு கொள்ளையிடப்பட்ட 40 பவுண் தங்கநகைகளும் அவரிடமிருந்து மீட்கப்பட்டன.

இந்த கொலைகளின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவரே நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

கொல்லப்பட்ட வீட்டிலிருந்து திருடப்பட்ட 40 பவுண் தங்க நகைகளும் அவரிடமிருந்து மீட்கப்பட்டன.

இந்த கொலைகளின் மற்றொரு பிரதான சூத்திரதாரி ஜேர்மனியில் இருக்கலாமென நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக நேற்று (22) மீட்கப்பட்டனர்.

கொலை செய்யப்பட்டு ஐந்து பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. குறித்து ஐந்து பேரும் 70 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் ஆவார்.

பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்ற 78 வயதான வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம்இ யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களான 82 வயதான நாகநதி பாலசிங்கம் இ 76 வயதான பாலசிங்கம் கண்மணிப்பிள்ளைஇ 83 வயதான கார்த்திகேசு நாகேஸ்வரிஇ 75 வயதான மகாதேவன் என்பவர்களே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 100 வயதான கனகம் பூரணம் என்ற மூதாட்டி யாழ். போதனா வைத்தியசாலையில் சிசிக்சை பெற்று வருகிறார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...