அரசாங்கத்தின் வரிக் கொள்கைகளால் 700 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!

Date:

அரசாங்கத்தின் வரிக் கொள்கைகள் காரணமாக 700 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் உழைக்கும் போதே வரி அறவீடு போன்ற பல காரணிகளினால் இவ்வாறு மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளிறேி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்களில் நிபுணத்துவ மருத்துவர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் மந்த போசனை நிலவி வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வரும் நிலையில், அனுராதபுரம் போதான வைத்தியசாலையின் சிறுவர் நோய் பிரிவில் கடமையாற்றிய நான்கு மருத்துவர்களும் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.

முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்லும் நிலைமை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

போராட்டங்களை நடாத்த வேண்டிய அவசியமில்லை என்ற போதிலும் தமது கோரிக்கைகளுக்கு செவி மடுக்காவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களுடனும் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...