ஜனவரி 1 முதல் இலங்கையில் ஒன்பது நில நடுக்கங்கள் பதிவு!

Date:

இலங்கையில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நேற்று வரை மொத்தம் 9 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டையில் இருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் பதிவாகிய நேற்றைய நிலநடுக்கம், இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையில் பதிவாகிய மிகப் பெரிய நிலநடுக்கம் எனவும் புவி இயற்பியலாளர் நில்மினி தல்தேன மேலும் தெரிவித்துள்ளார். இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியிருந்தது.

இலங்கையில் ஏற்பட்ட இந்த அதிர்வுகளுக்கான காரணத்தை கண்டறிய பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், அதற்கான காரணங்களை அவர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...