அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிட ஓகொடபொல உடுகொட கிளையினர் ஏற்பாடு செய்த பிரதேச உலமாக்களுக்கான ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும் ஓகொடபொல மஸ்ஜிதுல் பலாஹில் கடந்த 09 ஆம் திகதி நடைபெற்றது.
இதில் பல மூத்த உலமாக்களும் இளம் உலமாக்களும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்ச்சியில் தலைமையுரையுடன் புதிய நிர்வாக சபை அறிமுகம், உலமாக்கள் பரஸ்பர அறிமுகம், சபையோர் கருத்துக்கள் என்பன இடம் பெற்றன.
இந்நிகழ்வுக்கு பிரதேசத்தில் உள்ள ஐந்து ஜும்ஆப் பள்ளிவாயல்களின் நிர்வாக சபை உறுப்பினர்களில் தலா இருவர் வீதம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தலைவர் தனதுரையில் உலமாக்களின் பொறுப்பையும் உலமாக்களும் பள்ளிவாயல்களும் இணைந்து தொழிற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து உலமாக்களுக்கும் பள்ளிவாயல் நிர்வாக உறுப்பினர்களுக்கும் குறிப்பாக நிகழ்ச்சிக்குப் பூரண அனுசரணை வழங்கிய அல்ஹிமா இஸ்லாமிய சேவை நிலையத்திற்கும், பள்ளிவாயலில் அனுமதி வழங்கிய ஓகொடபொல பள்ளிவாயல் நிர்வாகத்திர்க்கும், உணவு ஏற்பாடுகளைச் செய்த ஓகொடபொல உலமாக்களுக்கும் இளைஞர்களுக்கும் ஜம்இய்யதுல் உலமாவின் செயற்குழுவினர் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என கஹட்டோவிட தலைவர் அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத் தெரிவித்துள்ளார்.