ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிட்ட ஓகொடபொல உடுகொட கிளையினால் உலமாக்களுக்கான ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும்

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிட ஓகொடபொல உடுகொட கிளையினர் ஏற்பாடு செய்த பிரதேச உலமாக்களுக்கான ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும் ஓகொடபொல மஸ்ஜிதுல் பலாஹில் கடந்த 09 ஆம் திகதி நடைபெற்றது.

இதில் பல மூத்த உலமாக்களும் இளம் உலமாக்களும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்ச்சியில் தலைமையுரையுடன் புதிய நிர்வாக சபை அறிமுகம், உலமாக்கள் பரஸ்பர அறிமுகம், சபையோர் கருத்துக்கள் என்பன இடம் பெற்றன.

இந்நிகழ்வுக்கு பிரதேசத்தில் உள்ள ஐந்து ஜும்ஆப் பள்ளிவாயல்களின் நிர்வாக சபை உறுப்பினர்களில் தலா இருவர் வீதம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தலைவர்  தனதுரையில் உலமாக்களின் பொறுப்பையும் உலமாக்களும் பள்ளிவாயல்களும் இணைந்து தொழிற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து உலமாக்களுக்கும் பள்ளிவாயல் நிர்வாக உறுப்பினர்களுக்கும் குறிப்பாக நிகழ்ச்சிக்குப் பூரண அனுசரணை வழங்கிய அல்ஹிமா இஸ்லாமிய சேவை நிலையத்திற்கும், பள்ளிவாயலில் அனுமதி வழங்கிய ஓகொடபொல பள்ளிவாயல் நிர்வாகத்திர்க்கும், உணவு ஏற்பாடுகளைச் செய்த ஓகொடபொல உலமாக்களுக்கும் இளைஞர்களுக்கும் ஜம்இய்யதுல் உலமாவின் செயற்குழுவினர் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என கஹட்டோவிட   தலைவர் அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...