டுபாயிலுள்ள இலங்கை பௌத்தர்களால் இப்தார் உணவுகள் விநியோகம்

Date:

டுபாயில் உள்ள இலங்கை பௌத்த சமூகம் அண்மையில் டுபாயின் அல் முஹைஸ்னாவில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு 1,500 இப்தார் உணவுகளை வழங்கியது.

கர்ஹூட்டை தளமாகக் கொண்ட லங்காராமய பௌத்த விகாரை மற்றும் தியான நிலையத்தினால் ரமழான் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒரு மதம் மற்றும் சமூகம் தலைமையிலான சங்கம் என்ற வகையில், இந்த விநியோகம் நன்றியுணர்வின் சைகையாகவும், ரமழானின் போது சமூகங்களுக்கிடையில் மத மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகவும் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீலங்காராமய பௌத்த விகாரை மற்றும் தியான நிலையத்தைச் சேர்ந்த மூவாகம்மன சாந்த தம்ம தேரர், “இவ்வாறான செயற்பாடுகள் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த உதவுவது மட்டுமன்றி, புனிதமான ரமழான் மாதத்தில் கருணை கொடுக்கும் மனப்பான்மை மற்றும் ஆசீர்வாதங்களை மேம்படுத்த உதவுகின்றன என்றார்.

ஸ்ரீலங்காராமய பௌத்த விகாரை மற்றும் தியான நிலையம் என்பது ஐக்கிய அமீரகத்தில் வசிக்கும் இலங்கை பௌத்தர்களின் சமய மற்றும் கலாசாரத் தேவைகளுக்கு சேவை செய்வதற்காக சமூக அபிவிருத்தி அதிகார சபையின் வழிகாட்டலின் கீழ் 2018 இல் நிறுவப்பட்ட ஒரு சமூக அமைப்பாகும்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...