ராம நவமி வன்முறை: இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சிக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம்

Date:

இந்தியாவில் நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு உலக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

தனது அதிகாரபூர்வ இணைய தளத்திலேயே இந்த கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களை  தலைமைச் செயலகம் கண்டிக்கிறது.

ராம நவமி ஊர்வலத்தின் போது இந்தியாவின் பல மாநிலங்களில் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து தீவிரவாத ஹிந்து கும்பல் ஒன்று, கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி பீகார் ஷெரீப்பில் மதரஸா மற்றும் அதன் நூலகத்தை எரித்தது உட்பட பல வன்முறை மற்றும் நாசவேலைகளை ஈடுபட்டுள்ளதை, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்  தலைமைச் செயலகம் ஆழ்ந்த கவலையுடன் அவதானித்தது.

இந்நிலையில், அமைப்பின் தலைமைச் செயலகம் இத்தகைய ஆத்திரமூட்டும் வன்முறை மற்றும் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகளைக் கண்டித்துள்ளது.

இந்தியாவில் இஸ்லாமிய சமூகத்தின் மீதான இஸ்லாமிய வெறுப்பு மற்றும் முறையான இலக்குகளின் மீதான தெளிவான தாக்குதல் வெளிப்பாடாகும்.

இதுபோன்ற வன்செயல்களைத் தூண்டுபவர்கள் மற்றும் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, பாதுகாவல், உரிமைகள் மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்தவும், இந்திய அதிகாரிகளை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைச் செயலகம் குறித்த அறிக்கையில் கேட்டுக்கொள்கிறது.

 

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...