வெப்பமான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும்!

Date:

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதால், அது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டை சுற்றி நிலவும் காற்றின் ஓட்டம் மிகவும் பலவீனமாக உள்ளதால், சுற்றுச்சூழலின் வெப்பநிலை உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள  துணை இயக்குநர் மெரில் மெண்டஸ் தெரிவித்தார்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் வெப்பமான காலநிலை அதிகமாக காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெப்பமான காலநிலை நிலவும் இக்காலத்தில் இயற்கையான திரவ உணவைப் போன்று தண்ணீரையும் அதிகமாகப் பெற்றுக்கொள்வது மிகவும் அவசியம் என ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் பாடசாலை மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...