அபுதாபியில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கைப் பெண் உயிரிழப்பு!

Date:

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள பானி யாஸ் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

குறித்த பெண் 2021 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இலங்கை தூதரகம் இந்த விடயத்தை ஒருங்கிணைத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அபுதாபியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...