அலி சப்ரி ரஹீமுக்கே அதிகூடிய அபராதம் விதிக்கப்பட்டது: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Date:

தங்கத்தை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு, கைப்பற்றப்பட்ட தங்கத்தின் அளவு தொடர்பாக அண்மைக் காலத்தில் விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

எம்பியை விடுவிப்பதில் எந்த முறைகேடும் இல்லை என்றும், இதேபோன்ற குற்றத்திற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள எவரும் அபராதம் செலுத்தினால் சுங்கச் சட்டத்தின்படி 24 மணி நேரத்திற்குள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதியில் மூன்று மடங்கு அபராதமாக அலி சப்ரி ரஹீமுக்கு விதிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தங்கத்துடன் ஒருவர் பிடிபட்டால், கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதியை விட மூன்று மடங்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் ரஹீமுக்கு ரூ. 7.5 மில்லியன் அதேசமயம் அவர் வைத்திருந்த தங்கத்தின் மதிப்பு ரூ. 70 மில்லியன் என்றார்.

மூன்று மடங்கு அபராதம் என்பது அதிகபட்ச அபராதம் என்றும், அதிகபட்ச அபராதம் பொதுவாக விதிக்கப்படுவதில்லை எனவும், கைப்பற்றப்பட்ட தங்கத்தின் அளவு தொடர்பாக அண்மைக் காலத்தில் எம்.பி.அலி சப்ரி ரஹீமுக்கு தான் அதிக அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அமைச்சர்,மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை

2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை இடம்பெறவுள்ளது....

பல பிரதேசங்களில் மழைக்கு வாய்ப்பு!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...