ஆகஸ்ட் முதல் துருக்கியிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

Date:

துருக்கி இஸ்தான்புல் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று இலங்கைக்கான துருக்கி தூதுவருக்கும் இலங்கை துறைமுக கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சருக்கும் இடையில் விமான போக்குவரத்து அமைச்சில் இன்று காலை இடம்பெற்றது.

இது தொடர்பாக நடந்த உத்தியோகபூர்வ கலந்துரையாடலில் துருக்கிய தூதுவர் டெமெட் செகர்சியோக்லு மற்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருடன் துருக்கிய ஏர்லைன்ஸ் தெற்காசிய அலுவலகத்தின் தலைவர் Fathi Bozkurt அவர்களும் உடனிருந்தார்.

தற்போது துருக்கிய ஏர்லைன்ஸ் மாலைத்தீவை ஊடறுத்து வருவதனால் கூடுதலாக ஒன்றரை மணி நேரம் அதிகமாகின்றது. இந்தத் தாமதம் பயணிகளால் விரும்பப்படுவதில்லை, என தூதுவர் வலியுறுத்தினார்.

இதனால் இஸ்தான்புல்லுக்கும் கொழும்புக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு நேரத்தையும் இடத்தையும் ஒதுக்குமாறு துருக்கிய ஏர்லைன்ஸின் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், இந்தக் கோரிக்கையானது சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் ஆகியோருக்கு அனுப்பப்படும் என்று கூறினார்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இஸ்தான்புல்லுக்கும் கொழும்புக்கும் இடையே நேரடி விமான சேவையை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

100 க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்ட புகழ்பெற்ற விமான நிறுவனமான டர்கிஷ் ஏர்லைன்ஸ், ஐரோப்பாவின் வான்கூவர் மற்றும் நியூயார்க்கை இணைக்கும் விமான சேவையை வழங்கி வருகிறது.

இந்த புதிய சேவையானது ஐரோப்பிய பயணிகளுக்கு நன்மை பயப்பது மட்டுமன்றி அவர்கள் இலங்கைக்கு வருவதற்கும் ஊக்கமளிக்கும் எனவும் துருக்கிய விமான சேவையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு கணிசமான அளவில் ஊக்கமளிக்கும் அதே வேளையில் இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை வளர்க்கும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்தக் கலந்துரையாடலின் போது அழுத்திக் கூறினார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...