இந்திய விமானப்படையின் தலைமை தளபதியும், இலங்கை கடற்படை தளபதியும் சந்திப்பு!

Date:

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படையின் விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌதரி, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை இன்று கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்துள்ளார்.

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் அழைப்பின்பேரில் இந்திய விமானப்படை தளபதி எயார் ஷீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்திரி அவர்கள்  மே 01ம் திகதி கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கை வந்தடைந்த்தார்.

வருகை தந்த இந்திய விமானப்படை தளபதிக்கு கொழும்பு விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சுரேஷ் பெர்னாண்டோ அவர்களின் தலமையில் விமானப்படை வர்ண அணிவகுப்பு படைப்பிரிவினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கி வரவேற்கப்பட்டார்.

இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த சந்திப்பின்போது இருநாட்டு கூட்டு பயிற்சிகள் மற்றும் கடல்சார் பாதுகாப்புகள் போன்றவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுசின்னம்களும் பரிமாறப்பட்டதுடன் இந்திய விமானப்படை தளபதி அவர்கள் இலங்கை விமானப்படை பணிப்பாளர்களையும் சந்தித்தார்.

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...