இன்று ஜப்பானில் G7 உச்சநிலை மாநாடு!

Date:

G7 தொழில்வள நாடுகளின் உச்சநிலை மாநாடு இன்று ஜப்பானில் நடைபெறுகிறது. உக்ரேனுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது தடைகளை விதிப்பது, சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கைச் சமாளிக்கும் வழிகளை ஆராய்வது – அந்த இரண்டு முக்கிய அம்சங்களில் G7 தலைவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

பிரிட்டனும், ஜப்பானும் தற்காப்பு உறவை வலுப்படுத்துவதற்காக ஹிரோஷிமா (Hiroshima) உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. ஜப்பானில் இனி நடைபெறவிருக்கும் கூட்டு ராணுவப் பயிற்சியில் பிரிட்டன் கூடுதல் துருப்புகளைப் பங்கேற்கச் செய்ய உடன்பாடு வழியமைக்கும். பொருளியல் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் புதிய தொழில்நுட்பங்களில் இணைந்து பணியாற்றவும் இரு நாடுகளும் முயல்கின்றன.

பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக் (Rishi Sunak), ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவைச் (Fumio Kishida) சந்தித்தபோது இருதரப்பு உடன்பாடு கையெழுத்தானது. இந்தோ – பசிபிக் வட்டாரத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் டொக்கியோவுடன் பாதுகாப்பு உடன்பாடு செய்துகொள்ளப்பட்டதாகத் திரு. சுனாக் கூறினார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...

பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஹார...