இன்று 10 மணித்தியால நீர்வெட்டு!

Date:

இன்று (08) காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 10 மணித்தியாலங்கள் சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

லங்கா மின்சார தனியார் நிறுவனத்தினால் (LECO) மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக கொலன்னாவ நீரேற்று நிலையத்திற்கான மின்சார விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளால் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக அந்த சபை அறிவித்துள்ளது.

நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் பிரதேசங்கள் பின்வருமாறு,

கொலன்னாவ நகரசபை, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எதுல்கோட்டை, நாவல, கொஸ்வத்தை, இராஜகிரிய மற்றும் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையிலான பிரதான வீதி மற்றும் அனைத்து கிளை வீதியிலும் நீர் விநியோகம் தடைப்படும்.

நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், தேவைக்கு ஏற்ப நீரைச் சேகரிக்குமாறு பிரதேசவாசிகளிடம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கோரியுள்ளது.

மேலதிக தகவல்களை அறிய விரும்பினால், 1939 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...