எக்ஸ்பிரஸ் பேர்ள் நிறுவனம் மீது வழக்குத் தொடரும் ஐக்கிய மக்கள் சக்தி!

Date:

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் அழிவினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்திற்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

6.4 பில்லியன் டொலர்களாக வரையறுக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ளுமாறும், இத்தொகை அழிவினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான தனியான கணக்கில் திறைசேரியில் வைப்பிலிடப்பட வேண்டுமெனவும் தொடர்புபட்ட தரப்பு தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும், எமது நாட்டு மக்களை பணத்திற்காக பிணை எடுக்க முடியும் என கப்பல் நிறுவனம் நினைத்தால் அது தவறு எனவும் நாம் யாரும் பணத்திற்கு அடிமை இல்லை எனவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Popular

More like this
Related

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...