ஒரு வாரத்திற்கு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள ரயில் நிலைய அதிபர்கள்!

Date:

போக்குவரத்து அமைச்சருடன் அடுத்த வாரம் நடைபெறும் கலந்துரையாடலின் போது தீர்மானம் எட்டப்படாவிட்டால் ஒரு வார கால வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

எதிர்வரும் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள அமைச்சருடனான கலந்துரையாடலின் போது திருப்திகரமான பதில் கிடைக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“எங்கள் அடையாள வேலை நிறுத்தம் இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு முடிவுக்கு வந்தது. அமைச்சின் செயலாளர் தலையிட்டு தேவையான அறிவுரைகளை ரயில்வே பொது முகாமையாளருக்கு இப்போதாவது வழங்குவார் என நம்புகிறோம்,” என்றார்.

செவ்வாய்கிழமைக்கான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் ஒன்றை அமைச்சர் சங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கலந்துரையாடலின் போது தீர்வு வழங்கப்படாவிட்டால், நிலைய அதிபர்கள் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...