கொழும்பில் திடீரென தீவிரமாக்கப்பட்ட பாதுகாப்பு: தயார் நிலையில் படையினர்!

Date:

கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு முதல் இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

கொழும்பு பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதியில் சில தரப்பினரால், அரசாங்கத்திற்கு எதிராக திட்டமிட்ட வகையில் அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலான தயார் நிலை காணப்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்தே, இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்திற்குள் சுமார் 750 பேரை கொண்ட குழுவொன்று, அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்படவுள்ளதாக இராணுவ புலனாய்வு பிரிவிற்கு தகவலொன்று கிடைத்துள்ளது.

இதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பொலிஸார், விசேட அதிரடிபடையினர், கலகத் தடுப்பு பிரிவினர் மற்றும் முப்படையினர் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு சுதந்திர சதுக்கம், கொள்ளுபிட்டி முச்சந்தி, அலரிமாளிகை உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

தனது இரண்டாவது மின்சார ஸ்கூட்டரான Rizta வை இலங்கையில் அறிமுகப்படுத்தும் Ather Energy

ஸ்ரீ லங்கா மோட்டார் வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் இந்தியாவின் முன்னணி மின்சார...

வடக்கு, கிழக்கு, வடமத்திய பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை

நாடு முழுவதும் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலைமை நிலைகொண்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில்..!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை...

அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவி: வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்.

நாட்டில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தத்தால் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த வாகனங்கள்...