கொழும்பில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் அனுர!

Date:

அடுத்த மாதம் மீண்டும் தேர்தலை நடத்துவதற்கான போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அனைவரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி தேர்தல் செயலகத்திற்கு அழைத்து வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட போது பெரும்பான்மையான வாக்காளர்கள் மக்கள் விடுதலை முன்னணியுடன் இருந்ததாகவும் தற்போதைய அரசாங்கம் தேர்தலை தாமதப்படுத்த பல்வேறு தந்திரங்களை கையாண்டதாகவும் தெரிவித்தார்.

ஆளும் அதிகாரம் ஒரு பொது இயக்கத்தை அடைவதைத் தடுக்க அரசாங்கமும் பிரதான எதிர்க்கட்சியில் இருப்பவர்களும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள் என்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மூன்று மாதங்களாக பிற்போடப்பட்டிருப்பது மக்களின் உரிமைகளை மீறும் செயலாகும்.

மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டுள்ளதால், தற்போதைய அரசியல் அமைப்பை மாற்ற விரும்பும் ஆயிரக்கணக்கான குடிமக்களால் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க...

யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து!

எதிர்வரும் நாட்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், ஆண்டின் இறுதிக்குள்...

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.

நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள்...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...