கோதுமை மாவின் விலை குறித்த அறிவிப்பு!

Date:

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கோதுமை மாவின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (09) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கே விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாவுக்கான சுங்க வரி 3% அதிகரித்துள்ளது. ஆனால் சந்தையில் மாவின் விலை 10 ரூபாவினால் அதிகரித்துள்ளது. விலை உயர்வு சூத்திரம் குறித்து அமைச்சர் அளித்த பதில் வருமாறு

“இது குறித்து மிகவும் தவறான செய்தி இருப்பதாக மாவு உற்பத்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. நான் சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளை அழைத்தேன். மாவின் விலை ஐந்து ரூபா கூட அதிகரிக்கப்படவில்லை என்பதை பொறுப்புடன் அறிவிக்குமாறு அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர்.

அடுத்த 6 மாதங்களுக்கு தேவையான மாவு கையிருப்பு உள்ளது “இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மாவின் விலை அதிகரிக்கவில்லை. இறக்குமதி செய்யப்படும் மாவு விலையே அதிகரித்துள்ளது.” என்றார்

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...