சிறுவர்கள் மத்தியில் காய்ச்சல் அதிகரிப்பு!

Date:

இந்த நாட்களில் இன்புளுவன்சா வைரஸ் தொற்றுக்குள்ளான சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனை ஆலோசகர் மற்றும் குழந்தை நல மருத்துவரான வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

மழை காரணமாக இன்புளுவன்சா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகவும், எந்தவொரு குழந்தைக்கும் இன்புளுவன்சா வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால், உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம் என்றும், இதுதவிர மழையால் குழந்தைகளுக்கு காய்ச்சலும் அதிகரித்துள்ளதால், இதுபோன்ற அறிகுறி தென்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...