செப்டெம்பர் மாதத்திற்குள் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்யலாம் :ஜனாதிபதி

Date:

இலங்கையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை செப்டெம்பர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

கடனாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் “குறிப்பிடத்தக்க” முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இலங்கை மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்பை பெற்றுள்ளது.

கடந்த மாதம், பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை கடனை மறுசீரமைப்பதை ஒருங்கிணைக்க இருதரப்பு கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தைக்கான பொதுவான தளத்தை வெளியிட்டன.

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...