ஜெரோம் பெர்னாண்டோ என்ற மத போதகர் தெரிவித்த கருத்து காரணமாக நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். .
ஜெரோம் பெர்னாண்டோ என்ற நபர் கத்தோலிக்க திருச்சபையுடன் தொடர்புடையவர் அல்ல என தெரிவித்தார்.
ஜெரோம் பெர்னாண்டோவின் கருத்தை தாம் கண்டிப்பதாகவும், அதனை முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மத அவமதிப்பு கருத்துகளை வெளியிட்டதாக கூறப்படும் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக அனைத்துக் கட்சிப் போராட்டக்காரர்கள் சங்கம் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.