தினசரி 12 மணித்தியாலங்கள் வேலை மாற்றத்திற்கு திட்டமிடும் அரசாங்கம் ?

Date:

அரசாங்கம் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிமுகப்படுத்தவும் தற்போதைய தினசரி வேலை நேரத்தை 8 மணித்தியாலத்தில் இருந்து 12 மணிநேரமாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக சில தொழிற்சங்க குற்றச்சாட்டுகளை தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார மறுத்துள்ளார். .

“தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துக்கள் தவறானவை. நாங்கள் பொது ஆலோசனைகளை ஆரம்பித்துள்ளோம், அதன் பிறகு நாங்கள் ஒரு முன்மொழிவை உருவாக்க வேண்டும்,” என்று அமைச்சர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். .

முன்னதாக, சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர் கூட்டுத் தொழிற்சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ் கூறுகையில்,

வாரத்தில் 4 நாள் வேலை என்று 3 நாட்கள் வார விடுமுறையுடன் அறிமுகப்படுத்தி 8 மணி நேர ஷிப்டுக்குப் பதிலாக 12 மணி நேர வேலை மாற்றத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

புதிய நடவடிக்கையால் தொழிலாளர்கள் தற்போது அனுபவித்து வரும் சலுகைகளை இழக்க நேரிடும். இந்த மாற்றத்தைத் தடுக்க அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைய வேண்டும்,” என்று அவர் கூறியிருந்தார் .

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...