நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்!

Date:

ஐக்கிய இராச்சியத்திற்கான தனது விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடு திரும்பியுள்ளார்.

லண்டனில் சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு நிகழ்வுக்காக ஜனாதிபதி கடந்த வியாழன் அன்று ஐக்கிய இராச்சியம் நோக்கிப் புறப்பட்டார்.

அங்கு, மூன்றாம் சார்லஸ் மன்னரின் பங்கேற்புடன் லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்றார்.

பின்னர் கானா மற்றும் ருவண்டா ஜனாதிபதிகளுடனும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடினார்.

தொடர்ந்து, சனிக்கிழமை லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற்ற மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு நிகழ்வில் பங்கெடுத்த ஜனாதிபதி, சார்லஸ் மன்னரைச் சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...