பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வழிகோலும் நெசவு தொழில்: பாகிஸ்தானில் சர்வதேச கண்காட்சி!

Date:

TEXPO எனப்படும் மிகப்பெரிய கண்காட்சியான சர்வதேச ஆடைக் கண்காட்சி  2023 மே 26 – 28 கராச்சியில்  பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள எக்ஸ்போ மையத்தில் நடைபெறும்.

TEXPO இன் 4வது கண்காட்சியான பாகிஸ்தானின் ஆடை  மற்றும் தோல் துறையில் நிலைத்தன்மையை முன்னிலைப்படுத்துவதில் கவனம் செலுத்துவதுடன் தொழில் வல்லுநர்கள் மற்றும் வர்த்தகர்களை சந்திக்க பொதுவான தளத்தை வழங்குகிறது.

மேற்படி இந்த கண்காட்சி தொடர்பாக ஊடக சந்திப்பை பாகிஸ்தானிலும் பல வெளிநாடுகளிலும் தோல் மற்றும் ஜவுளி உற்பத்திகளில் ஈடுபட்டுள்ள பிரபல தொழில் அதிபர்கள் உட்பட துறைசார் நிபுணர்கள் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

அதிகாரசபையின் தலைமை நிறைவேற்று அதிகாரி சுபைர் மோடிவாலா மற்றும் செயலாளர் இக்பால் குரேஷி விஷேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.

‘நிலைத்தன்மைக்கு வழி நெசவு என்ற இவ்வாண்டிற்கான தொனிப்பொருளானது பாகிஸ்தானின் தோல் மற்றும் ஜவுளி உற்பத்தித் துறை கால நிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு ஈடுகொடுத்த வண்ணம் முன்னேறி வருவதை சுட்டிக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

அதிகாரசபையின் மேற்படி முன்னெடுப்பானது இத்துறைகளில் பாகிஸ்தானின் சாதனைகளை பறைசாற்றியதுடன், பாகிஸ்தானின் தோல் மற்றும் ஜவுளி உற்பத்தித் துறைக்கு நீடித்த தீர்வுகளை வழங்குவதில் அதிகாரசபையின் அர்ப்பணிப்பை கோடிட்டுக்காட்டுவதாகவும் அமைந்திருந்தது.

கடந்த 2022 ஆண்டு பாகிஸ்தானை தாக்கிய பெரும் வெள்ளம் பாகிஸ்தானின் தோல் மற்றும் ஜவுளி உற்பத்தித் துறைக்கு நீடித்த தீர்வுகளை துரிதமாக அறிமுகப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியது.

இம்முறை துணி மற்றும் தோல் உற்பத்திகளின் சர்வதேச கண்காட்சியில் 200 இற்கும் அதிகமான நிறுவனங்கள் தமது உற்பத்திகளை காட்சிப்படுத்தும் என எதிர்பாரக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், கொலம்பியா, எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஈரான் உட்பட்ட 77 நாடுகளின் வர்த்தகர்கள் மற்றும் உலகளாவிய சுமார் 350 துறைசார் நிபுணர்கள் வருகை தரவுள்ள இக்ககண்காட்சியில் தோலை பயன் படுத்தி தயாரித்த ஆடைகள், பாதணிகள், ஜவுளி வகைகள், டெனிம் ஆடைகள், விளையாட்டு ஆடைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்படும்.

மேற்படி நிகழ்விற்கு வருகை தந்திருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அதிதிகளை வரவேற்ற திரு மோடிவாலா, பாகிஸ்தான் பூர்த்தியான துணி உற்பத்தி வசதிகளையும் வநியோக வாய்ப்புக்களையும் வழங்கத் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

வுநுஓPழு கண்காட்சியின் போது மே 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் ரிஸ்வான் பேக், ஸானா ஸஃபினாஸ், தீபக் பெர்வானி, அத்னான் பர்தேசி, வர்தா ஸலீம், ஹூமா அத்னான், ஷமீல் அன்சாரி, போன்ற பாகிஸ்தானின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் பிங்க் ட்ரீ ஜே, ஜஃபர்ஜீ போன்ற பிரபல நிறுவங்கள் தயாரித்த ஆடைகள், சுற்றுலா ஆடைகள், ஆடம்பர ஆடைகள் போன்றவை காட்சிப் படுத்தப்படும். மேற்படி உற்பத்திகளை பாகிஸ்தானின் பிரபர ஆண் மற்றும் பெண் மாடல்கள் சபைக்கு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை, கண்காட்சிக்கு சமாந்திரமாக மே 26 கராச்சி ஆளுனர் மாளிகையில் கலாசார நிகழ்வொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதன் போது பாகிஸ்தானிய கலைஞர்களின் ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்படும்.

வுநுஓPழு கண்காட்சி பற்றிய மேலதிக விபரங்களை அறிய  www.texpo.com.pk. இணையத்தளத்திற்கு உட்பிரவேசிக்கவும்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...