பத்திரிகை, இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு எரிசக்தி அமைச்சர் கோரிக்கை

Date:

தனது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் வகையில் சில ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழுவின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவது தொடர்பான பொய்யான செய்திகளை வெளியிட்டதன் மூலம் தனது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறியதாக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியை உள்ளடக்கிய உள்ளுர் ஊடக நிறுவனம் ஒன்றின் எம்.பி குற்றம் சுமத்தியுள்ளார்.

பல ஒன்லைன் செய்தி இணையதளங்கள் சமூக ஊடக தளங்களில் தன்னைப் பற்றிய தவறான தகவல்களைப் பகிர்வதாகவும் பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...