பாணந்துறையில் லொறி விபத்து:10 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Date:

பாணந்துறை வலான பிரதேசத்தில் இன்று (7) காலை லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் வெசாக் தோரணங்களை பார்ப்பதற்காக சென்று, மீண்டும் மத்துகம நோக்கி பயணித்து கொண்டிருந்த குழுவினரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்.

அவர்கள் பயணித்த லொறி முப்பது அடி உயர மின்கம்பத்தையும் இரண்டு இரும்பு வேலிகளையும் மோதியதன் பின்னர் கவிழ்த்து விபத்துக்குள்ளானதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விபத்தின்போது குறித்த பாரவூர்தியில் 17 பேர் பயணித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...