மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று!

Date:

இலங்கையில் கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கை 16,853 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இரண்டு இறப்புகள் அண்மையில் நிகழ்ந்த நிலையிலேயே இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி, மே 12ஆம் திகதி மேலும் இருவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 8 பேர் நேற்று முன்தினம் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 72 ஆயிரத்து 283 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் உட்பட பல வைரஸ்கள் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது.

Popular

More like this
Related

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...