மேல் மாகாணத்தில் பன்றிகளுக்கு வைரஸ் நோய்: மனிதர்களுக்கு ஆபத்து இல்லை என்கிறது சுகாதார  திணைக்களம்

Date:

மேல் மாகாணத்தில் பன்றிகளுக்கு பரவும் வைரஸ் நோய் தொடர்பில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெளிவுபடுத்திவுள்ளது.

இது தொற்றுநோய் அளவை எட்டவில்லை என சுகாதார  திணைக்களம் பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறது.

தேவையற்ற பீதி தேவையில்லை எனவும், அமைதி காக்குமாறு திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த வைரஸ் நோய் மனிதர்களுக்கு பரவும் அபாயம் இல்லை எனவும்அவர் பொதுமக்களுக்கு மேலும் உறுதியளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பன்றி இனத்தின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தில் மாத்திரமே கவனம் செலுத்தப்படுகிறது.

டிஆர்ஆர்எஸ் எனப்படும் வைரஸ் நோய், பன்றிகளின் சுவாச மண்டலத்தை முதன்மையாக பாதிக்கிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க கவலையாக இருந்தாலும், வைரஸை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...