வடமேல் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் மாட்டிறைச்சியை உண்ண வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

Date:

வடமேல் மாகாணத்தில் உள்ள கால்நடைகளுக்கு வைரஸ் நோய் பரவி வருவதால், வடமேல் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் மாட்டிறைச்சியை உட்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாகாணத்தில் கால்நடைகளுக்கு “லம்பி ஸ்கின் நோய்” எனப்படும் தொற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை வடமேல் மாகாணத்திற்கு கால்நடைகளை கொண்டு செல்வதையும், அங்கிருந்து செல்வதையும் தடை செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

மாகாணத்தில் கால்நடைகளுக்கு பரவும் குறித்த நோய் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் வடமேல் மாகாண அலுவலகத்தின் படி, மாகாணத்தில் உள்ள 46 கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுகளில் 34 கால்நடைகளுக்கு இந்நோய் பரவியுள்ளது.

இந்நோயானது மாடுகளின் பால் விளைச்சலில் குறைவை ஏற்படுத்துகிறது, ஆனால் மூன்று வாரங்களில் குணப்படுத்த முடியும் என திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தோல் நோய் இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...