வலிநிவாரணி மருந்து கொடுப்பது தொடர்பில் அவதானமாக இருக்கவும்!

Date:

தனியார் மருத்துவ நிறுவனங்களிலுள்ள தகுதியற்ற வைத்தியர்கள் டெங்கு நோயாளர்களுக்கு பராசிட்டமோலுக்கு பதிலாக வலி நிவாரணி மருந்துகளை வழங்குவதால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஆலோசகர் வைத்தியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தகுதி வாய்ந்த வைத்தியர்கள் சிலர் இதே தவறை செய்வதால் நோயாளர்கள் அதிக ஆபத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது டெங்கு, இன்புளுவன்சா உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவி வருவதாகவும், நோயாளிகளின் உடல் வலியைக் குறைக்க மருத்துவர்கள் வலி நிவாரணி மருந்துகளை வழங்கி வருவதாகவும், டெங்கு நோயாளிகளுக்கு வலி நிவாரணிகளை வழங்கி நோயாளிகளின் உயிரையே ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

காய்ச்சலுக்கு மருந்து எடுக்கும் போது பராசிட்டமோலுக்கு பதிலாக வேறு வலி நிவாரணி கொடுத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் நோயாளிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...