வலிநிவாரணி மருந்து கொடுப்பது தொடர்பில் அவதானமாக இருக்கவும்!

Date:

தனியார் மருத்துவ நிறுவனங்களிலுள்ள தகுதியற்ற வைத்தியர்கள் டெங்கு நோயாளர்களுக்கு பராசிட்டமோலுக்கு பதிலாக வலி நிவாரணி மருந்துகளை வழங்குவதால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஆலோசகர் வைத்தியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தகுதி வாய்ந்த வைத்தியர்கள் சிலர் இதே தவறை செய்வதால் நோயாளர்கள் அதிக ஆபத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது டெங்கு, இன்புளுவன்சா உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவி வருவதாகவும், நோயாளிகளின் உடல் வலியைக் குறைக்க மருத்துவர்கள் வலி நிவாரணி மருந்துகளை வழங்கி வருவதாகவும், டெங்கு நோயாளிகளுக்கு வலி நிவாரணிகளை வழங்கி நோயாளிகளின் உயிரையே ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

காய்ச்சலுக்கு மருந்து எடுக்கும் போது பராசிட்டமோலுக்கு பதிலாக வேறு வலி நிவாரணி கொடுத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் நோயாளிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...