அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தி: பராளுமன்றில் மௌன அஞ்சலி

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளதையிட்டு இன்று பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதற்கு இணக்கம் தெரிவித்தார்.

இதனையடுத்து, ஒரு நிமிடம் இந்த மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 2022 மே 09 ஆம் திகதி மாலை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் நிட்டம்புவவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை சுற்றிவளைத்த குழுவொன்று, அவரை வாகனத்திலிருந்து இறக்கி துரத்திச்சென்று சுட்டுக்கொலை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாளைய தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை

நாட்டில் நிலவும் அவசர அனர்த்த நிலைமை காரணமாக, வழமையான அலுவலக நடவடிக்கைகளை...

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் பீ.எம்.ஃபாருக் மறைவுக்கு தமிமுன் அன்சாரி அனுதாபம்!

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி...

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை...