அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை: கட்சித் தலைவர்கள் தீர்மானம்

Date:

தங்கம் கடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற அலுவல்கள் பற்றியக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் தலைமையில் இன்று நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.

இதன்போதே அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்சித் தலைவர்கள் தீர்மானம் எடுத்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் வெளிநாட்டில் இருந்து கடந்த 23ஆம் திகதி இலங்கை திரும்பிய போது 3.5 கிலோ தங்கம் மற்றம் பெறுமதி மிக்க தொலைபேசிகள் போன்ற பொருட்களுடன் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...