இன்றும் பலத்த மழை: வானிலை முன்னறிவிப்பு

Date:

மேல் மாகாணம் உட்பட ஐந்து மாகாணங்களில் இன்று (01) 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும்.

இதேவேளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மூன்று மாவட்டங்களில் உள்ள மூன்று பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தின் லக்கல பல்லேகம பிரதேச செயலகம், பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல பிரதேச செயலகம் மற்றும் கேகாலை மாவட்டத்தில் கேகாலை பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...