இன்று ஜப்பானில் G7 உச்சநிலை மாநாடு!

Date:

G7 தொழில்வள நாடுகளின் உச்சநிலை மாநாடு இன்று ஜப்பானில் நடைபெறுகிறது. உக்ரேனுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது தடைகளை விதிப்பது, சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கைச் சமாளிக்கும் வழிகளை ஆராய்வது – அந்த இரண்டு முக்கிய அம்சங்களில் G7 தலைவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

பிரிட்டனும், ஜப்பானும் தற்காப்பு உறவை வலுப்படுத்துவதற்காக ஹிரோஷிமா (Hiroshima) உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. ஜப்பானில் இனி நடைபெறவிருக்கும் கூட்டு ராணுவப் பயிற்சியில் பிரிட்டன் கூடுதல் துருப்புகளைப் பங்கேற்கச் செய்ய உடன்பாடு வழியமைக்கும். பொருளியல் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் புதிய தொழில்நுட்பங்களில் இணைந்து பணியாற்றவும் இரு நாடுகளும் முயல்கின்றன.

பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக் (Rishi Sunak), ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவைச் (Fumio Kishida) சந்தித்தபோது இருதரப்பு உடன்பாடு கையெழுத்தானது. இந்தோ – பசிபிக் வட்டாரத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் டொக்கியோவுடன் பாதுகாப்பு உடன்பாடு செய்துகொள்ளப்பட்டதாகத் திரு. சுனாக் கூறினார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...