இலங்கையின் மூத்த இராஜதந்திரி ஜயந்த தனபால காலமானார்!

Date:

மூத்த இராஜதந்திரியும், ஐக்கிய நாடுகளின் முன்னாள் துணைச் செயலாளருமான ஜயந்த தனபால தனது 85ஆவது வயதில் காலமானார் .

கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜயந்த தனபால, அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இராஜதந்திர அதிகாரியாகப் பணியாற்றியதோடு, ஜெனீவாவில் இலங்கையின் தூதுவராகவும் பணியாற்றினார்.

மேவேளை ஜயந்த தனபால 1998-2003 க்கு இடையில் ஐக்கிய நாடுகளின் ஆயுதக் குறைப்பு விவகாரங்களுக்கான அலுவலகத்தின் துணைச் செயலாளராகவும் பணியாற்றி இருந்தார்.

இவர் 30/12/1938 அன்று கண்டியில் பிறந்தார், மத்திய மாகாணத்தின் மாத்தளையில் மிக முக்கியமான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்.

தனது அடிப்படைக் கல்வியை கண்டி திரித்துவக் கல்லூரியிலும் உயர் கல்வியை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார்.

இளம் வயதிலேயே இலங்கை வெளிநாட்டுச் சேவையில் இணைந்து, லண்டன், பெய்ஜிங், வாஷிங்டன், புதுடெல்லி, ஜெனிவா ஆகிய இடங்களில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார். 1984ஆம் ஆண்டு ஜெனிவாவில் இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்ட அவர், 1995ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராகவும் நியமிக்கப்பட்டார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...