இலங்கையின் மூத்த இராஜதந்திரி ஜயந்த தனபால காலமானார்!

Date:

மூத்த இராஜதந்திரியும், ஐக்கிய நாடுகளின் முன்னாள் துணைச் செயலாளருமான ஜயந்த தனபால தனது 85ஆவது வயதில் காலமானார் .

கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜயந்த தனபால, அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இராஜதந்திர அதிகாரியாகப் பணியாற்றியதோடு, ஜெனீவாவில் இலங்கையின் தூதுவராகவும் பணியாற்றினார்.

மேவேளை ஜயந்த தனபால 1998-2003 க்கு இடையில் ஐக்கிய நாடுகளின் ஆயுதக் குறைப்பு விவகாரங்களுக்கான அலுவலகத்தின் துணைச் செயலாளராகவும் பணியாற்றி இருந்தார்.

இவர் 30/12/1938 அன்று கண்டியில் பிறந்தார், மத்திய மாகாணத்தின் மாத்தளையில் மிக முக்கியமான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்.

தனது அடிப்படைக் கல்வியை கண்டி திரித்துவக் கல்லூரியிலும் உயர் கல்வியை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார்.

இளம் வயதிலேயே இலங்கை வெளிநாட்டுச் சேவையில் இணைந்து, லண்டன், பெய்ஜிங், வாஷிங்டன், புதுடெல்லி, ஜெனிவா ஆகிய இடங்களில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார். 1984ஆம் ஆண்டு ஜெனிவாவில் இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்ட அவர், 1995ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராகவும் நியமிக்கப்பட்டார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...