இஸ்ரேல் – பலஸ்தீனம் இடையில சண்டை நிறுத்தம் அறிவிப்பு!

Date:

கடந்த 5 நாட்களாக  நீடித்த கடும் யுத்தத்தினிடையே நேற்று இரவு 10 மணி முதல் பலஸ்தீன ஜிகாத் யக்கத்தினருக்கும் இஸ்ரேல் இராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சமரச முயற்சியில் ஈடுபட்ட எகிப்து அரசு இருதரப்பும் வன்முறை யுத்தத்தைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த சண்டையில் பொது மக்கள் 13 பேர் உள்ளிட்ட 33 பலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

ராக்கெட் குண்டு வீச்சு மூலம் இஸ்ரேலில் 2 பேர் உயிரிழந்தனர். சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதும் ராக்கெட் சைரன் ஒலி இரவில் கேட்டுக் கொண்டே இருப்பதாக இஸ்ரேல் மக்கள் தெரிவித்தனர்.

இதனால் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் காசாவில் பூமிக்கடியில் உள்ள இரண்டு ரொக்கெட் லாஞ்சர் மீது அதிரடியாக குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...