எக்ஸ்பிரஸ் பேர்ள் நிறுவனம் மீது வழக்குத் தொடரும் ஐக்கிய மக்கள் சக்தி!

Date:

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் அழிவினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்திற்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

6.4 பில்லியன் டொலர்களாக வரையறுக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ளுமாறும், இத்தொகை அழிவினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான தனியான கணக்கில் திறைசேரியில் வைப்பிலிடப்பட வேண்டுமெனவும் தொடர்புபட்ட தரப்பு தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும், எமது நாட்டு மக்களை பணத்திற்காக பிணை எடுக்க முடியும் என கப்பல் நிறுவனம் நினைத்தால் அது தவறு எனவும் நாம் யாரும் பணத்திற்கு அடிமை இல்லை எனவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...