ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Date:

ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 9 மணி வரை இது அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பதுளை மாவட்டத்தில் பசறை பிரதேச செயலகப் பகுதியிலும் மாத்தளை மாவட்டத்தில் பல்லேபொல பிரதேச செயலகப் பகுதியிலும் நாளை காலை 9 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும்.

மேலும், காலி மாவட்டத்தில் உள்ள பத்தேகம, நாகொட, எல்பிட்டிய மற்றும் யக்கலமுல்ல பிரதேச செயலகப் பிரிவுகளிலும், யட்டியந்தோட்டை, ரம்புக்கன, தெரணியகல, மாவனல்ல, கேகாலை, கலிகமுவ பிரதேச செயலகப் பகுதிகளிலும், கேகாலை மாவட்டத்திலும் வசிப்பவர்களுக்கும் முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம, அலவ்வ மற்றும் பொல்கஹவெல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...