ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளை வெற்றிகரமாகப் பிரித்த சவூதி அரேபிய அறுவை சிகிச்சை நிபுணர் குழு

Date:

சவூதி அரேபியாவின்  விசேட அறுவை சிகிச்சைக் குழு, 14 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நைஜீரியாவைச் சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான ஹசானா மற்றும் ஹசீனாவைப் பிரித்துள்ளது.
36 பேர் கொண்ட சத்திரசிகிச்சை நிபுணர்கள் குழு, பல்துறை மருத்துவக் குழுவைச் சேர்ந்த 85 பேர் கொண்டு இந்த அறுவை சிகிச்சை எட்டு கட்டங்களாக  நடத்தப்பட்டது.

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மானின் உத்தரவின் பேரில் மருத்துவக் குழுவின் தலைவர் டாக்டர் அப்துல்லா அல்-ரபீஹ், வழிகாட்டுதலின் கீழ் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சவூதி அரேபியாவின் மனிதாபிமான முயற்சிகள் 33 ஆண்டுகளில் 23 நாடுகளில் இருந்து 130 ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு உதவியுள்ளன, இதன் விளைவாக ஹசானாவும் ஹசினாவும் பிரிக்கப்பட்ட 56 வது இரட்டையர்களாவர்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...