ஒரு வாரத்திற்கு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள ரயில் நிலைய அதிபர்கள்!

Date:

போக்குவரத்து அமைச்சருடன் அடுத்த வாரம் நடைபெறும் கலந்துரையாடலின் போது தீர்மானம் எட்டப்படாவிட்டால் ஒரு வார கால வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

எதிர்வரும் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள அமைச்சருடனான கலந்துரையாடலின் போது திருப்திகரமான பதில் கிடைக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“எங்கள் அடையாள வேலை நிறுத்தம் இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு முடிவுக்கு வந்தது. அமைச்சின் செயலாளர் தலையிட்டு தேவையான அறிவுரைகளை ரயில்வே பொது முகாமையாளருக்கு இப்போதாவது வழங்குவார் என நம்புகிறோம்,” என்றார்.

செவ்வாய்கிழமைக்கான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் ஒன்றை அமைச்சர் சங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கலந்துரையாடலின் போது தீர்வு வழங்கப்படாவிட்டால், நிலைய அதிபர்கள் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...