முறைசாரா தாம்பத்திய உறவை (LGBTQ+) குற்றமற்றதாக்கும் சட்டமூலத்திற்கு இலங்கை உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!

Date:

இலங்கையில் ஓரினச்சேர்க்கை உறவுகளை குற்றமற்றதாக்குவதற்கான சட்டத்தை சிறிய பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த மசோதாவை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையோ அல்லது தேசிய வாக்கெடுப்போ தேவையில்லை என்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான விஜித் மலல்கொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மூன்று மனுதாரர்கள் இந்த மசோதாவை எதிர்த்து, இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என்றும், அது அரசியலமைப்புக்கு முரணானது ஆகவே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.

இலங்கையில் உள்ள LGBTQ+ உரிமை ஆர்வலர்கள் ஓரினச்சேர்க்கைக்கு இன்னும் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதேவேளை இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து நிதியுதவி கிடைக்க வேண்டுமென்றால் இந்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டுமென்று நிபந்தனையை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...