கம்பளையில் காணாமல் போன பெண்ணை கொன்று புதைத்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் !

Date:

கம்பளை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) முதல் காணாமல் போயிருந்த யுவதியை, தான் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ
தெரிவித்துள்ளார்.

கம்பளை பிரதேசத்தில் வசித்துவந்த 22 வயதுடைய பாத்திமா முனவ்வரா என்ற குறித்த யுவதி தனது பணியிடத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது காணாமல் போயிருந்தார்.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் 24 வயதான சந்தேகநபர் ஒருவரை பொலிஸாரால் கைதுசெய்திருந்தனர்.

குறித்த சந்தேகநபர் யுவதியை ​​காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று கொன்று புதைத்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

சடலத்தை புதைத்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்த போதிலும், சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...