கொழும்பில் திடீரென தீவிரமாக்கப்பட்ட பாதுகாப்பு: தயார் நிலையில் படையினர்!

Date:

கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு முதல் இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

கொழும்பு பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதியில் சில தரப்பினரால், அரசாங்கத்திற்கு எதிராக திட்டமிட்ட வகையில் அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலான தயார் நிலை காணப்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்தே, இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்திற்குள் சுமார் 750 பேரை கொண்ட குழுவொன்று, அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்படவுள்ளதாக இராணுவ புலனாய்வு பிரிவிற்கு தகவலொன்று கிடைத்துள்ளது.

இதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பொலிஸார், விசேட அதிரடிபடையினர், கலகத் தடுப்பு பிரிவினர் மற்றும் முப்படையினர் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு சுதந்திர சதுக்கம், கொள்ளுபிட்டி முச்சந்தி, அலரிமாளிகை உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...