கொழும்பு – காங்கேசன்துறை புகையிரத சேவை ஜூலையில் ஆரம்பம்

Date:

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா ஓமந்த வரையிலான வடக்கு புகையிரதப் பகுதியானது அதற்குள் முழுமையாக புனரமைக்கப்படும் என்பதாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு ரயில்வேயின் நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ், வடக்கு ரயில்வேயின் இரண்டாம் கட்டம் அனுராதபுரத்திலிருந்து மஹவ வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அநுராதபுரத்திலிருந்து வவுனியா ஓமந்த வரையிலான வடக்கு புகையிரதத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வடக்கு புகையிரத பாதையில் எதிர்வரும் ஜுலை மாதம் 15ஆம் திகதி முதல் வழமை போன்று புகையிரத சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...