கொழும்பு ஸாஹிராவில் நடைபெற்ற ‘RPSL Consortium’ அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம்!

Date:

முஸ்லிம்களுடைய தேசிய, சமூக விவகாரங்களில் இந்நாட்டிலுள்ள புத்திஜீவிகள், கல்வியியலாளர்கள் சமூகவியலாளர்கள் கலந்துகொண்டு சமூக மேம்பாட்டுக்காக பங்கேற்குமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (07)  RPSL Consortium அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் மருதானை ஷாகிரா கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் வக்பு சபையின் தலைவரும் சட்டத்தரணி சப்ரி ஹலிம்தீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்வமைப்பின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான அமைச்சர் அலி சப்ரி பிரதான உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் இரண்டாவது அமர்வு வசீம் முக்தார் தலைமையில் ‘முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் இடம்பெற்றது.

கருத்தரங்கின் போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ரவூப் ஹக்கீம் முன்னாள் அமைச்சர்களான பேரியல் அஷ்ரப், பைசர் முஸ்தபா,கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் உமர் காமில், தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி சலீம் மர்சூக்,கலந்துகொண்டதுடன்  ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சி அகார் முஹம்மத் சிறப்பு மார்க்க சொற்பொழிவையாற்றினார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...