கொவிட் -19 சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றவும் – பொதுச் சுகாதார பரிசோதரகர்கள்

Date:

கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்கள் பரவுவதைத் தடுக்க, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதரகர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.

தற்போது, ​​கணிசமான எண்ணிக்கையிலான சந்தேகத்திற்கிடமான கொவிட் -19- தொற்றாளர்கள் நாடு முழுவதும் பதிவாகத் தொடங்கியுள்ளன, மேலும் அரசாங்க தகவல் திணைக்களம் கொவிட் -19 இறப்புகளின் எண்ணிக்கை குறித்து நாளாந்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

“இருப்பினும், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளும்போது, ​​​​பல வைரஸ் தொற்றுக்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான கொரோனா நோயாளர்கள் பரவலாக அடையாளம் காணப்படுவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொவிட் -19 நோயாளர்கள் பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களில் அடையாளம் காணப்படுகின்றனர்.

எனவே, முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுதல், பொதுக் கூட்டங்களைத் தவிர்ப்பது போன்ற கொவிட் -19 சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றி மக்கள் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும்.

தற்போதைய வைரஸின் பரவல் ஒரு தொற்றுநோய் நிலைமையை ஏற்படுத்துமா மற்றும் ஒரு பாரிய பேரழிவாக மாறுமா என்பதை தீர்மானிக்க சோதனைகள் எதுவும் நடத்தப்படவில்லை.

எனவே, கொவிட் -19 வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதார பரிந்துரைகளை மக்கள் பின்பற்றுவது கட்டாயமாகும்” என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...