கோதுமை மாவின் விலை குறித்த அறிவிப்பு!

Date:

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கோதுமை மாவின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (09) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கே விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாவுக்கான சுங்க வரி 3% அதிகரித்துள்ளது. ஆனால் சந்தையில் மாவின் விலை 10 ரூபாவினால் அதிகரித்துள்ளது. விலை உயர்வு சூத்திரம் குறித்து அமைச்சர் அளித்த பதில் வருமாறு

“இது குறித்து மிகவும் தவறான செய்தி இருப்பதாக மாவு உற்பத்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. நான் சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளை அழைத்தேன். மாவின் விலை ஐந்து ரூபா கூட அதிகரிக்கப்படவில்லை என்பதை பொறுப்புடன் அறிவிக்குமாறு அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர்.

அடுத்த 6 மாதங்களுக்கு தேவையான மாவு கையிருப்பு உள்ளது “இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மாவின் விலை அதிகரிக்கவில்லை. இறக்குமதி செய்யப்படும் மாவு விலையே அதிகரித்துள்ளது.” என்றார்

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...