எரிவாயுவின் விலை அடுத்து வரும் சில தினங்களில் மேலும் குறையும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.