சூடானில் துருக்கி தூதுவரின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு: தூதரகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது!

Date:

துருக்கி  தூதுவரின் வாகனம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவத்திற்கு பிறகு, சூடானின் தலைநகரான கார்ட்டூமில் உள்ள தனது தூதரகத்தை போர்ட் சூடானுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக துருக்கியின் வெளியுறவு அமைச்சர்  Mevlut Cavusoglu சனிக்கிழமை அறிவித்தார்.

“எங்கள் தூதரகம் மற்றும் எங்கள் சக ஊழியர்களின் பாதுகாப்பிற்காக, நாங்கள் எங்கள் தூதரகத்தை போர்ட் சூடானுக்கு மாற்ற முடிவு செய்தோம், என வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

துருக்கி தூதுவர் இஸ்மாயில் கோபனோக்லு சூடான் இராணுவம் மற்றும் துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) ஆகிய இருவருடனும் இந்த பிரச்சினையை விவாதித்து, இடமாற்றத் திட்டங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவித்ததாக துருக்கி  அமைச்சர் மேலும் கூறினார்.

சனிக்கிழமையன்று சூடானுக்கான துருக்கி தூதுவரின் உத்தியோகபூர்வ வாகனம் துப்பாக்கிச் சூட்டில் தாக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது, அதே நேரத்தில் வாகனம் சேதமடைந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தாக்குதல் நடந்த பகுதி இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறிய RSF, நாட்டில் உள்ள தூதரகப் பணிகளைப் பாதுகாப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...