சென்னை அணி வசமானது ஐபிஎல் கிண்ணம்

Date:

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதன்படி சென்னை அணி 5வது முறையாக ஐபிஎல் போட்டியின் கிண்ணத்தை வென்றுள்ளது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 214 ஓட்டங்களைப் பெற்றது.

அந்த அணி சார்பில் சாய் சுதர்சன் 58 பந்துகளில் 96 ஓட்டங்களைப் பெற்றார்.

நேற்றைய போட்டியில் சென்னை அணி சார்பாக தனது இன்னிங்ஸை நிறைவு செய்த இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மத்திஷ பத்திரன 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதில் இன்னிங்ஸ் விளையாட சென்னை அணி களம் இறங்கியபோது, ​​மழையால் ஆட்டம் தடைபட்டது.

டக்வொர்த் லூயிஸ் கோட்பாட்டின் படி சென்னை அணிக்கு 15 ஓவரில் 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பதில் இன்னிங்சை விளையாடிய சென்னை அணி விறுவிறுப்பான ஆட்டத்திற்குப் பிறகு 15 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.

சென்னையின் அனைத்து நம்பிக்கைகளையும் தன் மீது சுமந்த ஜடேஜா, கடைசி இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து குஜராத் அணிக்கு ஏற்கனவே இருந்த வெற்றியின் அலையை மாற்றினார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...